![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwwLA5nY6IAqbVQrREY3gwxFuQyBzXfrq2ZK2Bmed20x0rzYLPrqYA190ZM8DZDslw3YorjXF2wTI86jxl03TbdScqLShFDbnt3UxxmjTw35eAX3vPbRb4sIH6-tl6yCaOMn34YxgDoM_ZbnsD2loSDfl6_RsJZaFobz0VEhAX3HMnAOnnxdwgjwq_/s16000/home.webp)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விஸ்தரிப்பு மற்றும் புனரமைப்பிற்காக 400 மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போதும், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அது தொடர்பான திருத்தங்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், கோரிக்கை பரிசீலனை பிற்போடப்பட்டது.
புனர்நிர்மாணம் முடியும் வரை புல்லர்ஸ் லேனில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வீடு ஒன்றை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இணையச் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)