பயன்படுத்தாமல் மாதந்த வாடகை செலுத்தி வரும் அரசினால் பெறப்பட்ட 250 கூலி வாகனங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயன்படுத்தாமல் மாதந்த வாடகை செலுத்தி வரும் அரசினால் பெறப்பட்ட 250 கூலி வாகனங்கள்!

தனியார் நிறுவனங்களில் இருந்து அரசினால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சுமார் 250 வாகனங்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும் மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் பற்றாக்குறையால் குறித்த வாகனம் ஓடாமல் நிறுத்தப்பட்ட நிலையில் மாதாந்திர வாடகை செலுத்தப்பட்டு வருகின்றது.

இதில் ஒரு வாகனத்திற்கு குறைந்தபட்ச மாத வாடகை இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் என தெரியவந்துள்ளது. 

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, செலவுகளை மட்டுப்படுத்துமாறும், வாகன பாவனையை கட்டுப்படுத்துமாறும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், பல அரச நிறுவனங்கள் அந்த அறிவுறுத்தல்களை புறக்கணித்து, வாடகை செலுத்தி வாகனங்களை இயக்காமல் நிறுத்தியுள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.