
சந்தேகநபர்கள் விமானப் பயணி மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரியில்லா (Duty Free) நிறுவன பெண் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் இருந்து EK650 என்ற விமானத்தில் பயணித்த பயணி விமான நிலையத்தில் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.
சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 80 தங்க பிஸ்கட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)