ரூ. 200 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்த முயன்ற கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் உட்பட இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரூ. 200 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்த முயன்ற கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் உட்பட இருவர் கைது!

இலங்கைக்குள் ரூ. 200 மில்லியன் பெறுமதியான 9.5 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் விமானப் பயணி மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரியில்லா (Duty Free) நிறுவன பெண் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

டுபாயில் இருந்து EK650 என்ற விமானத்தில் பயணித்த பயணி விமான நிலையத்தில் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார். 

சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 80 தங்க பிஸ்கட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.