சட்டவிரோத மோட்டார் சைக்கிள் போட்டியில் கலந்துகொண்ட 19 வயது இளைஞன் விபத்தில் சிக்கி பலி (VIDEO)!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் போட்டியில் கலந்துகொண்ட 19 வயது இளைஞன் விபத்தில் சிக்கி பலி (VIDEO)!

பொகுந்தர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சட்டவிரோத மோட்டார் சைக்கிள் போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போட்டியின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பொகுந்தர ஐ.சி.சி வீதியில் நேற்று மோட்டார் சைக்கிள் போட்டி நடைபெற்றது.

உயிரிழந்தவர் பிலியந்தலை, பெல்வத்தை, கோரக்கபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.