QR குறியீட்டுடன் கூடிய எரிபொருள் விநியோகம் தொடர்பான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

QR குறியீட்டுடன் கூடிய எரிபொருள் விநியோகம் தொடர்பான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு!


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் பரீட்சார்த்த எரிபொருள் விநியோகத்தை இன்று (21) முதல் ஆரம்பித்தது.

அதன்படி, ஜூலை 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை QR அமைப்பின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படாது.

தற்போது கொழும்பில் பரீட்சார்த்த முறை இடம்பெறுவதால் தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட QR குறியீடு ஜூலை 25 ஆம் திகதிக்கு பிறகு மட்டுமே செயல்படும்.

செவ்வாய் மற்றும் சனி: 0,1,2 
வியாழன் மற்றும் ஞாயிறு: 3,4,5
திங்கள், புதன் மற்றும் வெள்ளி: 6,7,8,9 

வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. 

எரிபொருள் விநியோக கட்டுப்பாடுகள்: 

இரு சக்கர வண்டிகள்: ரூ. 1500
முச்சக்கர வண்டிகள் : ரூ. 2000
ஏனைய வாகனங்கள் : ரூ. 7000

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அடுத்த வாரம் QR குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்த முடியும் என நம்புகிறது, அதுவரை இலக்கத் தகடு முறையின் கீழ் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.