இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி இராஜினாமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி இராஜினாமா!

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவரது தலையீட்டினால் 17 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கூட்டணி ஆட்சியை கவிழ்ந்தமையால் இவர் இந்த முடிவை எடுத்தார்.

மரியோ டிராகி இத்தாலிய ஜனாதிபதி சர்கே மெட்டெரல்லாவினை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை கையளித்ததாக கூறப்படுகிறது. அப்போது, ​​புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் வரை டிராகி பிரதமராக இருக்க வேண்டும் என்று அதிபர் மேட்டரெல்லா மேலும் கூறினார். அதன்படி, தற்காலிக பிரதமராக மரியோ டிராகி நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இத்தாலிய பாராளுமன்றத்தின் செனட்டில் டிராகிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் தோல்வியடைந்துள்ளார்.

இருப்பினும், கூட்டணி அரசாங்கத்தில் உள்ள பல முக்கிய அரசியல் குழுக்கள் டிராகியை ஆதரிக்க மறுத்ததால், அவரால் இனி பதவியில் இருக்க முடியவில்லை.

இத்தாலிய செனட் 315 ஆசனங்களை கொண்டுள்ளது. செனட்டில் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது, ​​டிராகியின் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன.(யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.