(PHOTOS) இலங்கையிலிருந்து புறப்படவிருந்த துருக்கிய விமானம் விபத்துக்குள்ளானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

(PHOTOS) இலங்கையிலிருந்து புறப்படவிருந்த துருக்கிய விமானம் விபத்துக்குள்ளானது!

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, திரும்பிச் செல்ல தயாராகி கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான ஏ330-300 ஏர்பஸ் ரக சரக்கு விமானம், துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு கடந்த 3 ஆம் திகதி இரவு 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கலனை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிலைய அதிகாரிகள் சரியான தடுப்பு (பிரேக்கிங்) இன்றி விமானத்திற்கு அருகில் நிறுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால் இந்த விமானத்தின் வலது பக்க #2 எஞ்சின் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.