BREAKING: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்வதாக தெரிவிப்பு - குறித்த தினம் எப்போது என்றும் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்வதாக தெரிவிப்பு - குறித்த தினம் எப்போது என்றும் அறிவிப்பு!

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். 

சபாநாயகர் தலைமையில் இன்று பிற்பகல் கூடிய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என தீர்மானித்துள்ளனர். 

அதனையடுத்து, சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படும் வகையில் குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தை நியமிக்க கட்சித் தலைவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர். (யாழ் நியூஸ்)

header ads

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.