ஜனாதிபதி மாளிகையில் இரவு சமையல் செய்த ஆர்பாட்டக்காரர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி மாளிகையில் இரவு சமையல் செய்த ஆர்பாட்டக்காரர்கள்!

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், நீச்சல் குளத்தில் நீராடும் புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், இரவு உணவு  சமைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், மாளிகையை சுற்றிப்பார்த்ததுடன், சொகுசு ஆசனங்களில் அமர்ந்து தேநீர் அருந்தியிருந்தனர்.

போராட்டக்காரர்கள் நுழைந்தயைடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள், பஸ்கள் மூலம் மாளிகையை விட்டு வெளியேறுவதைக் அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை வெளியேறப் போவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.