ஜப்பான் நாரா நகரில் முன்னாள் பிரதமர் சின்சோ அபே மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். காயமடைந்த சின்சோ அபே-வை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் குறித்து ஜப்பான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேடையில் நின்று பேசிக் கொண்டு இருக்கும்போது அவருக்கு பின்னர் இருந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருதயத்தில் அடிபட்டு இருக்கலாம் என்றும், அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் குறித்து ஜப்பான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேடையில் நின்று பேசிக் கொண்டு இருக்கும்போது அவருக்கு பின்னர் இருந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருதயத்தில் அடிபட்டு இருக்கலாம் என்றும், அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.