புதிய ஜனாதிபதியை நியமிக்க ஐந்து பேருடன் நாங்கள் மதகுருமார்கள் தயார் நிலையில் உள்ளோம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய ஜனாதிபதியை நியமிக்க ஐந்து பேருடன் நாங்கள் மதகுருமார்கள் தயார் நிலையில் உள்ளோம்!


புதிய ஜனாதிபதியை நியமிப்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வராத பட்சத்தில், அந்த பதவிக்கு பொருத்தமான ஐந்து சிவில் சமூக ஆர்வலர்களை நியமிக்க மதகுருமார்கள் தயாராக இருப்பதாகவும், அவர்களை தேசிய பட்டியல் ஊடாக நியமிக்க அனுமதிக்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். 

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை உணர்ந்த, நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்த, சர்வதேச உறவுகளைக் கொண்ட, அரசியல் நோக்கங்கள் அற்ற இவ்வாறான ஐந்து சிவில் செயற்பாட்டாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், சிவில் சமூக அமைப்புகளுடன் ஏற்கனவே இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தேரர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் குறித்த அந்த நபர்களின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது, இது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும், சரியான நேரத்தில் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் கூறினார். 

"எதிர்கால ஜனாதிபதியை அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுவான உடன்படிக்கையுடன் தேசிய தேவைகளின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும். அரசியல் அதிகார மோதலை விட்டுவிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒருமித்த கருத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு செய்ய முடியாவிட்டால் நாங்கள் தயாராக இருக்கிறோம். பதவிக்கு பொருத்தமான ஐந்து சிவில் செயற்பாட்டாளர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறான நிலையில், ஐந்து எம்.பி.க்களுக்குப் பதிலாக அவர்களை தேசியப் பட்டியல் மூலம் நியமிக்க அனுமதிக்குமாறு கட்சித் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.