ஜனாதிபதி பயணிக்க விமானம் வழங்கியமை அரசியலமைப்புச் சட்டமாகும்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி பயணிக்க விமானம் வழங்கியமை அரசியலமைப்புச் சட்டமாகும்

ஜனாதிபதி, முதற் பெண்மணி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மாலத்தீவு செல்வதற்கு அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே விமானம் வழங்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப்படையினை மேற்கோள்காட்டி வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு சுங்கம் மற்றும் ஏனைய சகல சட்டங்களுக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதியுடன் குறித்த விமானம் புறப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இலங்கை ஜனாதிபதி நாட்டில் இருந்து வெளியேறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பை விமானப்படை வெளியிட்டுள்ளது.

அதேநேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியு‌ள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.