காலி முகத்திடலில் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆறு செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் விதித்த கட்டளை இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி முகத்திடலில் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆறு செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் விதித்த கட்டளை இது தான்!

கொழும்பில் காலி முகத்திடலில் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆறு செயற்பாட்டாளர்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செயற்பாட்டாளர்கள் ஆறு பேருக்கும் வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கத்தோலிக்கப் பாதிரியார் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ‘மாற்றத்திற்கான இளைஞர்கள்’ அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் எரங்க குணசேகர ஆகியோர் செயற்பாட்டாளர்களாக உள்ளனர்.

ஜூன் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கமவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட பல போராட்டக்காரர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பொலிஸாருக்கு ஜூன் 17 ஆம் திகதி உத்தரவிட்டார்.

குற்றவியல் நிர்ப்பந்தம், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல், சட்டவிரோதமாக ஒன்றுகூடல், காயங்களை ஏற்படுத்துதல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.