ரணிலுக்கு ஆதரவு வழங்க நாம் எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை! -அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரணிலுக்கு ஆதரவு வழங்க நாம் எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை! -அலி சப்ரி

புதிய ஜனாதிபதிக்கான தெரிவில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் நாளை 19ஆம் திகதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்று எட்டப்படும் எனவும் முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரி எம். பி தெரிவித்தார்.

தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் கட்சி என்ற வகையில் இதுவரை பொதுவான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேட்புமனு தாக்கல் செய்த பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். எனினும் ஜனாதிபதி தெரிவில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என பொதுஜ பெரமுன இதுவரை எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. 

நாளை 19ஆம் திகதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.