🛑 கரையை நோக்கி அலை வரும் அபாயம் - கரையோர பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

🛑 கரையை நோக்கி அலை வரும் அபாயம் - கரையோர பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!

கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் (சுமார் 2.5 - 3.5 மீற்றர் வரை) அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான நிலப்பகுதியை கடல் அலைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொழும்பில் இருந்து காலி வரையான ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.