
புத்தளத்திலிருந்து கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் (சுமார் 2.5 - 3.5 மீற்றர் வரை) அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான நிலப்பகுதியை கடல் அலைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொழும்பில் இருந்து காலி வரையான ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)

