நான்கு ஜனநாயக ஆர்வலர்களுக்கு மரண தண்டனை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான்கு ஜனநாயக ஆர்வலர்களுக்கு மரண தண்டனை!!


மியன்மார் இராணுவம் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

இவர்களில் ஒருவர் திரு­வாட்டி அங் சான் சூ சியி கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது. பயங்கரவாத நடவடிக்கைகளை வழிநடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மரண தண்டனை முறைப்படி நடந்ததாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தண்டனை எப்போது, எப்படி மேற்கொள்ளப்பட்டது போன்ற  தகவல்கள் வெளியிடப்படவில்லை. 

இதேபோன்று ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு மியன்மார் இராணுவம் மரண தண்டனை விதித்துள்ளது. 

மியன்மாரில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. 

மரண தண்டனையைக் கண்டித்த எதிர்க்கட்சிகளும், மனித உரிமை குழுக்களும் குரல் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.