பெட்ரோல் திருட்டு; உரிமையாளர் கத்திக்குத்துக்கு உள்ளாகி பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெட்ரோல் திருட்டு; உரிமையாளர் கத்திக்குத்துக்கு உள்ளாகி பலி!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை திருட்டில் ஈடுபட்ட மற்றைய நபர் கத்தியால் குத்தியுள்ளார்.

இக்கொலை இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரளை காசல் வீதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேக நபர் 29 வயதுடைய அந்த பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

பொரளை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.