காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மூன்று பிரதான செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டில் இருந்து இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் நான்கரை கோடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என குற்றப் புலனாய்வு திணைக்களம் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
யூனியன் பிளேஸில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு இந்த தொகை வெளிநாட்டில் இருந்து வரவு வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)