புதிய ஜனாதிபதியை ஒரு மாதத்துக்குள் வீட்டுக்கு அனுப்புவோம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய ஜனாதிபதியை ஒரு மாதத்துக்குள் வீட்டுக்கு அனுப்புவோம்!


புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்திற்குள் வீட்டுக்கு அனுப்புவோம் என காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்த 134 பேரையும் பொதுமக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை நசுக்க முயல்வதாக தெரிவித்த அவர்கள் படையினருக்கு தாம் பயப்படப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

அதேநேரம், புதிய வடிவில் ஆர்ப்பாட்டம் தொடர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.