நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2022 ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது காலதாமதமான கட்டணங்களை வசூலிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)