கண்டி, பொல்கொல்ல நீர்த்தேக்க வான்கதவு திறக்கப்பட்டதும் மண்மேட்டில் சிக்கிய இளைஞர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி, பொல்கொல்ல நீர்த்தேக்க வான்கதவு திறக்கப்பட்டதும் மண்மேட்டில் சிக்கிய இளைஞர்கள்!

கடந்த சில நாட்களாக கண்டி பிரதேசத்தில் அடை மழை பெய்து வருவதோடு, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஹரகம பிரதேசத்தில் பெய்த அடை மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து பல வான்கதவுகளை திறக்கப்பட்டது.  மண்மேட்டில் சிக்கியிருந்த இரு இளைஞர்களை பொலிஸ் உயிர்காப்பு குழுவினர் அங்கு சென்று மீட்டுள்ளனர்.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டு மாலை மூன்று மணியளவில் குறித்த இரு இளைஞர்களும் குறித்த மண்மேட்டின் நடுப்பகுதியில் சிக்கியுள்ளனர்.

இது தொடர்பில் தலாத்துஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தலதா மாளிகை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதேச பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் நிலைய கட்டளைத்தளபதி பிரதம பரிசோதகர் யாப்பாவின் வழிகாட்டலின் கீழ்,
 சில நிமிடங்களில் உயிர்காப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து, 45 நிமிடத்தில் கயிறுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 

குருதெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த இருவருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.