பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என ரணில் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என ரணில் தெரிவிப்பு!

ஆறு மாதங்களுக்குள் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க கூறியுள்ளதால் அதற்கு ஆதரவளிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுர திஸாநாயக்க விரும்பினால் பிரதமர் பதவியை விட்டு விலகவும் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு விழுந்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் யாரேனும் மீண்டு வர முடிந்தால், அந்த நபருக்கு நோபல் பரிசு வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடு அல்ல, வங்குரோத்து நாடாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அந்த வரம்பில் இருந்து இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியது என அவர் தொடர்ந்தும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.