அலரிமாளிகையில் இருந்து திருடப்பட்ட இரு தொலைக்காட்சிப் பெட்டிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அலரிமாளிகையில் இருந்து திருடப்பட்ட இரு தொலைக்காட்சிப் பெட்டிகள்!

அலரி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையகப்படுத்திய பின்னர் இரு தொலைக்காட்சிப் பெட்டிகளை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 அங்குல இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடியவர் சமையல்காரர் ஒருவர் என கிருலப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் தங்கும் விடுதியில் ஒரு தொலைக்காட்சியும், மற்றைய தொலைக்காட்சி 10,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டது.

இந்த இரு தொலைக்காட்சிகளில் பெறுமதி சுமார் ஆறு இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நபர் ஐஸ் எனப்படும் போதைப்பொருளுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.