எரிபொருள் நிலவரம் - அமைச்சரின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் நிலவரம் - அமைச்சரின் அறிவிப்பு!

நாட்டிற்கு வருகை தந்திருக்கும் எரிபொருள் கப்பல் மற்றும் இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் கப்பல்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே இன்று (16) அதிகாலை ஒரு டீசல் கப்பல் நாட்டிற்கு வந்துள்ளதுடன், தரம் மற்றும் மாதிரி சோதனை தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

இன்று பிற்பகுதியில் மற்றுமொரு டீசல் கப்பல் வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த வாரம் ஜூலை 18 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் பெற்றோல் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மூன்று எரிபொருள் கப்பல்களுக்கு ஏற்கனவே முழுமையாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாக காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், மேலதிக விபரங்கள் 12:30க்கு நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.