ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய நபர் சிசிடிவி ஆதாரங்களுடன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய நபர் சிசிடிவி ஆதாரங்களுடன் கைது!

மக்கள் போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்ததை அடுத்து குறித்த நபர் கொடியைத் திருடியுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, அந்த நபர் தனது இடுப்பில் கொடியைக் கட்டிக்கொண்டு நடமாடுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்பிறகு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், அந்த நபர் கொடியை படுக்கை விரிப்பாகப் பயன்படுத்தியதாகவும், அதை எரித்து அழிக்கவும் நினைத்ததாகக் காட்டியது.

சிசிடிவி காட்சிகள் மூலம் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நபரை பிடிக்க பொலிசார் விசாரணை நடத்தினர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.