வெல்லம்பிட்டிய ஒருகுடவத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (25) இரவு ஒருகுடவத்தை மேம்பாலத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய குருனியாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் கொலை செய்யப்பட்டவர் சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தின் சகோதரர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)