போதைப்பொருள் கடத்தல் விவகாரம்; டான் பிரியசாத்தின் சகோதரர் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்; டான் பிரியசாத்தின் சகோதரர் கொலை!

வெல்லம்பிட்டிய ஒருகுடவத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

நேற்று (25) இரவு ஒருகுடவத்தை மேம்பாலத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய குருனியாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மேலும் கொலை செய்யப்பட்டவர் சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தின் சகோதரர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

போதைப்பொருள் கடத்தல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.