வாக்களிப்பது தொடர்பில் சமூக வலைத்தளங்களின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிப்பவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும்! -பதில் ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாக்களிப்பது தொடர்பில் சமூக வலைத்தளங்களின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிப்பவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும்! -பதில் ஜனாதிபதி

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சமூக வலைத்தளங்களின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிப்பவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு அச்சுறுத்தல்களினால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கவலைகளை கருத்திற்கொண்டு பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அத தெரண தெரிவித்துள்ளது. 

இதன்படி, நாடாளுமன்ற சிறப்புரிமைச் சட்டம் மற்றும் அது தொடர்பான குற்றவியல் சட்டங்களின் கீழ் இது தொடர்பான சம்பவங்களை விசாரிக்குமாறு ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். 

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக பாராளுமன்றத்திற்கு செல்வதற்கும் வருவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும், எந்தவொரு தடையாக இருந்தாலும் அது அவர்களின் பாராளுமன்ற சிறப்புரிமைக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.