வரிசையில் இருந்து அனைத்து வாகனங்களும் அகற்றப்பட்ட பின்னரே எரிபொருள் விநியோகம் துவங்கும்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வரிசையில் இருந்து அனைத்து வாகனங்களும் அகற்றப்பட்ட பின்னரே எரிபொருள் விநியோகம் துவங்கும்!!

எதிர்காலத்தில் எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருளை விநியோகிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"எதிர்காலத்தில், இந்த அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் மேலும், ஒவ்வொரு வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி எண்ணுக்கு குறிப்பிட்ட திகதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் எமக்கு அறிவித்தார்.

இந்த அனுமதிப்பத்திரத்தின் படி வாரம் இருமுறை எரிபொருள் வழங்கப்படும். வரிசையில் நிற்பதால் எந்த பலனும் கிடைக்காது என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதன்படி தனக்கான குறிப்பிட்ட நாளில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரவேண்டும்" என்றார்.

அதேசமயம், "விநியோகம் தொடங்கும் வரை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே வரிசையில் இருந்து அனைத்து வாகனங்களும் அகற்றப்பட்ட பின்னரே அந்த எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

மேலும் தேசிய எரிபொருள் பாஸ் மற்றும் நம்பர் பிளேட்டின் கடைசி இலக்கம் இரண்டும் கட்டாயமாக்கப்படும்" என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.