எதிர்காலத்தில் எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருளை விநியோகிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"எதிர்காலத்தில், இந்த அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் மேலும், ஒவ்வொரு வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி எண்ணுக்கு குறிப்பிட்ட திகதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் எமக்கு அறிவித்தார்.
இந்த அனுமதிப்பத்திரத்தின் படி வாரம் இருமுறை எரிபொருள் வழங்கப்படும். வரிசையில் நிற்பதால் எந்த பலனும் கிடைக்காது என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதன்படி தனக்கான குறிப்பிட்ட நாளில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரவேண்டும்" என்றார்.
அதேசமயம், "விநியோகம் தொடங்கும் வரை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே வரிசையில் இருந்து அனைத்து வாகனங்களும் அகற்றப்பட்ட பின்னரே அந்த எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
மேலும் தேசிய எரிபொருள் பாஸ் மற்றும் நம்பர் பிளேட்டின் கடைசி இலக்கம் இரண்டும் கட்டாயமாக்கப்படும்" என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)