குத்தகைக்கு சைக்கிள் வண்டி; அணி திரளும் பொதுமக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குத்தகைக்கு சைக்கிள் வண்டி; அணி திரளும் பொதுமக்கள்!


எரிபொருள் நெருக்கடியால் மக்கள் மாற்றுப் போக்குவரத்திற்கு வேகமாகத் திரும்பி வருகின்றனர். 

சில பகுதிகளில், மக்கள் தங்கள் போக்குவரத்து தேவைகளையும் கரத்தை மூலம் பூர்த்தி செய்து வருகின்றனர்.

அதேநேரம், தனியார் போக்குவரத்திற்கு பதிலாக பொது போக்குவரத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். 

இதற்கிடையில், சந்தையில் சைக்கிள்களுக்கான பெரும் கேள்வி எழுந்து வருகிறது. சைக்கிள் உதிரிபாகங்கள் மற்றும் பழுதுபார்க்கும் கடைகள் மிகவும் பிஸியாகியுள்ளது.

சில சைக்கிள் கடைகளில், மக்கள் வரிசையில் இருந்து சைக்கிள்களை வாங்குவதற்கு முயற்சிப்பதும் காணப்படுகிறது. இந்த நாட்களில் ஒரு சைக்கிளின் குறைந்தபட்ச விலை சுமார் 50,000 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சில குத்தகை நிறுவனங்கள் தற்போது மிதிவண்டிகளுக்கான குத்தகை வசதிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.