ஊழலை தடுத்தால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பணம் - அமெரிக்கா தெரிவிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊழலை தடுத்தால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பணம் - அமெரிக்கா தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் கடன் தொடர்பில் அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் ஏதாவது உடன்படிக்கைக்கு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

1. மத்திய வங்கியின் சுதந்திரத்தை நிறுவுதல்,

2. ஊழலுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும்

3. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல்,

ஆகியவை முழுமையாக இடம்பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கட்டுப்பாடற்ற கடன் மற்றும் மோசமான பொருளாதார நிர்வாகத்தால் இலங்கை தொடர்ந்து பாதிக்கப்படும் என அமெரிக்க செனட்டின் வெளிநாட்டு உறவுகள் குழு டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய வேலைத்திட்டத்தின் நோக்கம் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதுடன் ஊழல் அபாயத்தை எதிர்ப்பதற்கு புதிய சீர்திருத்தங்களைச் சேர்ப்பது எனவும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.