போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கும் புகையிரத திணைக்களத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கும் புகையிரத திணைக்களத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி!

போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கும் புகையிரத திணைக்களத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து தொழிற்சங்கங்கள் தமது தொழில் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு வழமை போன்று புகையிரத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, அவற்றை உடனடியாக தீர்க்குமாறு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பேமசிறி, புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை, சில ரயில்கள் இயங்காததால் சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசிப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.

புகையிரத திணைக்களத்திற்கு குறைந்த அளவு பெற்றோல் கிடைப்பதால், தேவையான அனைவருக்கும் வழங்கினால் அவை போதாது என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க, ரயில்வே திணைக்களத்தின் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து சபையில் இருந்து சில பேருந்துகளை எடுத்து, ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.