
வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பசில் ராஜபக்ச நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்ததுடன் அவருடன் பெருமளவான வாகனங்களும் சென்றிருந்தன.
இதன் காரணமாக வக்கீல்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், ‘எங்கள் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் திருடர்களின் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்குகிறார்கள’ என வக்கீல்கள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)