சிகிரியாவில் தாக்கப்பட்ட அமெரிக்க மாணவன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிகிரியாவில் தாக்கப்பட்ட அமெரிக்க மாணவன்!

சீகிரியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவரை அங்கிருந்த பாதுகாவலர் என அழைக்கப்படும் ஒருவர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். 

இது தொடர்பில் சீகிரிய சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பல்கலைக்கழக மாணவனை எட்டி உதைத்ததில், அதனைத் தவிர்க்க முற்பட்ட போது அவர் தரையில் விழுந்து இரண்டு விரல்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த மாணவன் தனது கையடக்கத் தொலைபேசியில் சீகிரியா ஓவியங்களின் புகைப்படங்களைப் பெறச் சென்ற போதே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து சீகிரியாவிற்கு விஜயம் செய்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.