நாளை முதல் நாடளாவிய ரீதியில் எ‌ரிபொரு‌ள் விநியோகம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் நாடளாவிய ரீதியில் எ‌ரிபொரு‌ள் விநியோகம்?


லங்கா ஐஓசி நிறுவனம் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எ‌ரிபொரு‌ள் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், லங்கா ஐஓசியில் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் தாங்கிகளை நாளை (01) முதல் பணிக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா, இலங்கையில் ஒப்பந்த அடிப்படையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து எரிபொருள் தாங்கிகளும் நாளை முதல் விநியோக நடவடிக்கையில் இணையுமாறு நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி நடத்தும் வகையில், லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்து 7,500 மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.