யாழ்பபாண சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ்பபாண சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

2022 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி முதல் யாழ்பபாண சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம் இந்தியாவின் ஆதரவுடன் மீள் அபிவிருத்தித் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 11 நவம்பர் 2019 அன்று யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக மீண்டும் திறக்கப்பட்டது.

அடிப்படை சர்வதேச கண்காணிப்பு தேவைகளை உறுதிப்படுத்தும் வகையில் 2019 நவம்பரில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கொரோனா தொற்றுநோய் காரணமாக அதன் செயற்பாடுகள் மார்ச் 2020 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச மற்றும் உள்நாட்டில் இயங்கும் வானூர்தி நிறுவனங்கள் யாழ் விமான நிலையத்தில் இருந்து தென்னிந்திய பிரதேசங்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானப் பயணங்கள் மற்றும் நேரக் கட்டமைக்கப்பட்ட வானூர்தி விமானங்களை இயக்குவதற்கான கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு துறைமுகங்கள், கடற்படை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.