பெற்றோல் எனக்கூறி சிறுநீரினை விற்பனை செய்த சம்பவம் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெற்றோல் எனக்கூறி சிறுநீரினை விற்பனை செய்த சம்பவம் பதிவு!


நீர்கொழும்பில் எரிபொருளின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை எரிபொருளாக விற்பனை செய்த நபரொருவர் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் எரிபொருள் தீர்ந்து தனது மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் தனக்கு எரிபொருள் தேவையா எனக் கேட்டு அவரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர் எரிபொருளை விற்பனை செய்த நபரிடம் ரூ.  5000 இனை கொடுத்துவிட்டு மீதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அருகில் உள்ள கடைக்கு விரைந்து சென்றுள்ளார்.

இச்செயலை செய்தவர் ‘பல்லா’ எனப்படும் பிரதேசத்தில் பிரபல மோசடி செய்பவர் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர் என தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.