எ‌ரிபொரு‌ள் விநியோக பட்டியலை நீக்கிய பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எ‌ரிபொரு‌ள் விநியோக பட்டியலை நீக்கிய பெற்றோலிய கூட்டுத்தாபனம்!


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (18) வெளியிடப்பட்ட எரிபொருள் விநியோகப் பட்டியலை தமது இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கியுள்ளது. 

எரிபொருள் இருப்பை சரிபார்க்க ICTA (Fuel.Gov.lk) உருவாக்கிய சிறப்பு இணையத்தளமும் நீக்கப்பட்டுள்ளது.

“அசௌகரியத்திற்கு மிகவும் வருந்துகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிடைத்த அறிவுறுத்தல்களின் காரணமாக இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நாங்கள் விரைவில் திரும்பி வருவோம்" என்று இணையதளம் ஒரு அறிவிப்பில் கூறியுள்ளது. 

டீசல் மற்றும் பெற்றோல் கிடைக்காத காரணத்தினால், இலங்கை இன்று அதன் வரலாற்றில் மிக நீளமான எரிபொருள் வரிசையை அனுபவித்து வருகிறது. மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் காரணமாக தற்போது எரிபொருள் விநியோகத்திற்காக 30% எரிபொருள் பவுசர்களே பயன்படுத்தப்படுவதாக பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.