பழைய உலோகங்கள் சேகரிக்கும் பாணியில் பல்வேறு வெடிகுண்டுகள் சேகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பழைய உலோகங்கள் சேகரிக்கும் பாணியில் பல்வேறு வெடிகுண்டுகள் சேகரிப்பு!


கிளிநொச்சி கச்சாய், பூலோப்பளை பகுதியில் பழைய உலோகங்களை சேகரிக்கும் பாணியில் பல்வேறு வகையான வெடிகுண்டுகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

யாழ். காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் யாழ். பொலிசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் வீடொன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் பழைய உலோகங்களை சேகரிப்பதாக கூறி சேகரித்த மோட்டார் குண்டுகள், ஆர்.பி.ஜி வெடிமருந்துகள், பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட 6 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் இந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த வெடிபொருட்களை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு விற்பனை செய்வதற்கு சந்தேகநபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.