தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாகிஸ்தான் முழு ஆதரவு - பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாரூக்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாகிஸ்தான் முழு ஆதரவு - பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாரூக்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்க்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே உமர் பாரூக் புர்க்கி இதனைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பலதரப்பு உறவுகள் அரசியல், வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று உயர்ஸ்தானிகர் கூறினார்.

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக தெரிவு செய்யப்பட்ட மருந்துகளை வழங்கியதற்காகவும், இலங்கை மாணவர்களுக்கு அந்நாட்டில் உயர் கல்வியை தொடர்வதற்கு புலமைப்பரிசில்களை வழங்கியதற்காகவும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதி உயர்ஸ்தானிகரிடம் விளக்கினார்.

தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க பாகிஸ்தான் அரசு உதவிகளை வழங்கும் என்றும், இலங்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாகவும் திரு.உமர் பாரூக் புர்கி தெரிவித்தார்.

- ஜனாதிபதி ஊடகப் பிரிவு
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.