
கடந்த 17ஆம் திகதி கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே உமர் பாரூக் புர்க்கி இதனைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பலதரப்பு உறவுகள் அரசியல், வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று உயர்ஸ்தானிகர் கூறினார்.
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக தெரிவு செய்யப்பட்ட மருந்துகளை வழங்கியதற்காகவும், இலங்கை மாணவர்களுக்கு அந்நாட்டில் உயர் கல்வியை தொடர்வதற்கு புலமைப்பரிசில்களை வழங்கியதற்காகவும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதி உயர்ஸ்தானிகரிடம் விளக்கினார்.
தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க பாகிஸ்தான் அரசு உதவிகளை வழங்கும் என்றும், இலங்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாகவும் திரு.உமர் பாரூக் புர்கி தெரிவித்தார்.
- ஜனாதிபதி ஊடகப் பிரிவு