எரிசக்தி அமைச்சர் மற்றும் போக்குவரத்து பிரதிநிதிகள் இடையில் விசேட கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிசக்தி அமைச்சர் மற்றும் போக்குவரத்து பிரதிநிதிகள் இடையில் விசேட கலந்துரையாடல்!

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (18) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பிரதிநிதிகளான முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள், தனியார் பேருந்துகள் நடத்துனர், பாடசாலை மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகள் சாரதிகள், கொள்கலன் போக்குவரத்து சேவைகள் மற்றும் வணிக போக்குவரத்து வாகன ஓட்டுனர்கள் உட்பட பல போக்குவரத்து துறைகளை சேர்ந்தவர்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டின் போது மேற்கூறிய போக்குவரத்துத் துறைகள் குறைந்தபட்ச தடையின்றி செயல்படும் வகையில் எரிபொருள் விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

எரிபொருள் விநியோக முறைமை விரைவில் வகுக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர மீண்டும் வலியுறுத்தியதோடு, அந்த முறைமை அமுலுக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டிகளை எரிபொருள் நிலையத்தில் பதிவு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கலந்துரையாடலை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் கலந்துகொண்டார். அதன் பிரகாரம், பொலிஸாருடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.