யாழில் இருந்து தமிழகத்திற்கு கப்பல் சேவை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் இருந்து தமிழகத்திற்கு கப்பல் சேவை!


தமிழ்நாடு மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சரக்கு போக்குவரத்து சேவையை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

சரக்கு படகு சேவையும் விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 

இந்தப் படகுச் சேவையின் மூலம் எரிபொருள், உரம், பால் மா, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் மக்கள் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பலாலி, திருச்சி மற்றும் சென்னை இடையே பயணிகள் விமானங்கள் ஜூலை 1 முதல் இயக்கப்படும் என்று அவர் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.