உதிக்க இருக்கும் உயிர்களைக் கொன்றார், என கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாபியின் உயிர்காக்கும் உயரிய நன்கொடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உதிக்க இருக்கும் உயிர்களைக் கொன்றார், என கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாபியின் உயிர்காக்கும் உயரிய நன்கொடை!


சட்டரீதியற்ற முறையில் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட  வைத்தியர் ஷாபி  சஹாப்தீன் அவர்களின் நிலுவையான சம்பளத் தொகையை வைத்தியர் அவர்களுக்கு வழங்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த ஆணை பிரகாரம் அவரு சம்பளத்bதொகை அவரிடம் வழங்கப்பட்டது. 

தனக்கு வழங்கப்பட்ட தனது உழைப்புக்கான ஊதியத்தை மீண்டும் வைத்தியசாலைக்கு அவர் பரிசளிக்கப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக வைத்தியர் அவர்களை தொடர்பு கொண்ட போது தனது ஊதிய பணத்தை  நோயால் அவதியுறும்
உயிர்காக்கும் அவசர மறந்து பொருட்களை
(Life serving emergency Drug) கொள்வனவு செய்வதற்காக வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்ய எண்ணி உள்ளதாகவும் தெரிவித்தார்

மேலும் உயிர்காக்கும் அவசர மருந்துப் பொருட்களை தயார் செய்யும் இந்தியா மருந்து நிறுவனம் ஒன்றிலிருந்து அவசரமாக தானே அதை தருவித்து அன்பளிப்பு செய்யவிருப்பதாகவும் இருப்பதாகவும்  அவர் தெரிவித்தார்.

உதிக்க இருக்கும் உயிர்களைக் கொன்றார் என கைது செய்யப்பட்டு அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட வைத்தியர் ஷாபியின் உயிர்காக்கும் உயரிய நன்கொடையாகும்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.