இனி இவ்வாறு தான் எரிபொருள் வழங்கப்படும் - வரிசைகளில் மக்கள் காத்திருக்க வேண்டாம் - எரிசக்தி அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி இவ்வாறு தான் எரிபொருள் வழங்கப்படும் - வரிசைகளில் மக்கள் காத்திருக்க வேண்டாம் - எரிசக்தி அமைச்சர்

தற்போதைய எரிபொருள் நெருக்கடியானது நிதி நிலைமை சீராகும் வரை சுமார் ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு தரப்பினரின் தலையீட்டில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கும் வேலைத்திட்டம் நாளை (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த டோக்கன் அட்டை, குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் அடுத்த கப்பல் வரும் வரை மட்டுப்படுத்தப்படும், பவுசர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்தவுடன் டோக்கன் பெற்றவர்களுக்கு அறிவிக்கப்படும்.

எதிர்வரும் சில நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் டோக்கன் பெற்று வீடுகளுக்கு செல்லுமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.