பொதுமக்களுக்கு பொலிஸாரின் விசேட வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களுக்கு பொலிஸாரின் விசேட வேண்டுகோள்!


எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் பெற்றுக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள பொலிஸார் முயன்றபோது பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டினார்.

பொலிஸாருக்கு எரிபொருள் கோட்டா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன்காரணமாக பொதுமக்களுக்கு  இடையூறு ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.

கலவரங்களைத் தடுப்பது, குற்றவாளிகளைக் கைது செய்தல், போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல், போக்குவரத்து ஒருங்கிணைப்பு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கியக் கடமைகளை நிறைவேற்றும் அத்தியாவசிய சேவையாக பொலிஸார் திகழ்வதாக பொதுமக்களுக்கு நினைவுபடுத்தினார்.

இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பொலிஸாருக்கு எவ்வித இடையூறும் இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்றார். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.