விரைவில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவிருப்பதாக தெரிவிப்பு!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விரைவில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவிருப்பதாக தெரிவிப்பு!!!

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடைசியாக 2014 ஆம் ஆண்டு மின்கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டதாகவும், மின்கட்டணத்திலும் குறைப்பு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

நிலக்கரி விலை, எரிபொருள் விலை மற்றும் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இலங்கை மின்சார சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை இனி தாங்க முடியாது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தினை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் தீர்மானிக்கப்படும் எனவும் அதன் பின்னர் எவ்வாறு மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.