பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முட்பட்ட இளம் பெண் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முட்பட்ட இளம் பெண் கைது!


அவிசாவளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு 250,000 ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த திங்கட்கிழமை (20) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து அவிசாவளை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விநியோகித்த குற்றத்திற்காக குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

35 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி அவிசாவளை காவல்துறையின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை அணுகி சந்தேக நபரை பிணையில் விடுவிக்க அவருக்கு ரூ. 250,000 பணத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட குறித்த அதிகாரி, இந்த விடயம் தொடர்பில் சீதாவகபுர பொலிஸ் பிரிவுக்கு அறிவித்தார், பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு தகவல் அனுப்பப்பட்டது.

முன்பணமாக ரூ.150,000 இனை செலுத்துவதற்காக வந்த போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 32 வயதுடைய அவிசாவளை பகுதியைச் சேர்ந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவரின் நடவடிக்கைகள் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.