நேற்றுவரை வழங்கப்பட்ட எ‌ரிபொரு‌ள் டோக்கன்கள் இரத்து செய்யப்பட்டது! காரணம் இதுதான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றுவரை வழங்கப்பட்ட எ‌ரிபொரு‌ள் டோக்கன்கள் இரத்து செய்யப்பட்டது! காரணம் இதுதான்!


எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது எதிர்வரும் 10ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு எரிபொருளை விடுவிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இரண்டு மூன்று நாட்களுக்குள் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என நேற்று பல பெட்ரோல் நிலையங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கன்களை பெற நேற்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

இதேவேளை, எரிபொருள் கையிருப்பு முற்றாக தீர்ந்ததை அடுத்து இலங்கை அமைச்சர்கள் பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 

கடன் முறையில் எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அரபு நாடான கட்டார் நாட்டுக்கு சென்றுள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் ரஷ்யாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார், தாமதமாக பணம் செலுத்தும் அடிப்படையில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் கடனைத் திருப்பிச் செலுத்தப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளதால் சர்வதேச சமூகத்துடனான கடன் ஒப்பந்தங்கள் மிகவும் கடினமானதாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.