சிப்பெட்கோ எ‌ரிபொரு‌ள் கையிருப்பு தொடர்பாக வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிப்பெட்கோ எ‌ரிபொரு‌ள் கையிருப்பு தொடர்பாக வெளியான தகவல்!

தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் ஒக்டென் 95 வகை பெற்றோல், 3,000 மெட்ரிக் தொன் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வெளியிடப்பட்டாலும், அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே அது போதுமானது இருக்குமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தவிர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் மற்றும் 92 ஒக்டேன் பெற்றோல் இருப்புக்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், லங்கா ஐஓசியிடம் சுமார் 10,000 மெட்ரிக் டன் டீசல் கையிருப்பில் உள்ளதென அறிக்கைகள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

அடுத்த சில நாட்களுக்கு, தம்வசமுள்ள டீசல் கையிருப்பில் சிலவற்றை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்க லங்கா ஐஓசி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

டொலர் தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழில்முறையற்ற நிர்வாகமும் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு நேரடிக் காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உரிய நேரத்தில் தீர்மானங்களை எடுக்காத காரணத்தினால் வேண்டுமென்றே நிலைமை மோசமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.