நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு - அதிகமாக பரவும் மாவட்டங்கள் விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு - அதிகமாக பரவும் மாவட்டங்கள் விபரம் வெளியானது!

இலங்கையில் மீண்டும் டெங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மேல்மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன், டெங்கு பரவும் அபாயம் உள்ள மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு வரை 26,622 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், கடந்த 8 நாட்களில் மாத்திரம் 2416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த நாட்களில் ஒருவருக்கு காய்ச்சல் அல்லது உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு தேசிய தொற்று நோய்களுக்கான நிலையத்தின் வைத்தியர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கவும், டெங்குவை ஒழிக்க உதவுமாறும் மருத்துவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.