முடியாதோருக்கு அரசாங்கத்தினால் இலவச உணவு வழங்க முடியும்! - பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முடியாதோருக்கு அரசாங்கத்தினால் இலவச உணவு வழங்க முடியும்! - பிரதமர்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (09) மாலை இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதிய உறுப்பினர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் பணியாளர்கள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்படும் என தான் நம்புவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக உணவுப் பாதுகாப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 3 வேளை உணவை பெற்றுக்கொள்ள முடியாத 10% மக்களுக்கு அரசாங்கம் இலவசமாக உணவை வழங்க முடியும் என தான் நம்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உண்மையான நிலையை வெளிப்படுத்த அரசாங்கத்திற்கு உதவுமாறு ஊடக நிறுவன பிரதானிகளிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர், தேவையான போது ஊடகங்கள் அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் பொறுப்பான அறிக்கையிடலை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் கோரினார்.

அரசாங்கத்தின் முன்முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் காரணமாக அதன் விளைவுகளை நாடு அனுபவிக்க வேண்டியிருக்கும் என பிரதமர் விளக்கமளித்தார்.

எவ்வாறாயினும், நிதி மற்றும் பெளதீக உதவிகளை வழங்குவதன் மூலம் பாதிப்பைக் குறைக்க அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார். சமூக நலனோம்பலுக்காக 200 பில்லியன் ரூபா நிதி திரட்டப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார் .

ஜப்பானின் நம்பிக்கையை மீட்பதற்கும் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் ஜப்பானுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். உணவு மற்றும் மருத்துவப் பொருட்களில் உதவி செய்வதில் நாடுகள் முன்னேறி வருவதாகவும், எனினும், எந்த நாடும் எரிபொருளை இலவசமாக வழங்க முன்வராது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மாதங்களில் நாட்டுக்கு உதவ முயற்சிகள் எடுக்கப்படுதல் ஊடக நிறுவனங்களின் ஆதரவிலேயே தங்கியிருப்பதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.